• Jul 25 2025

சிம்பு கேட்டவுடனே ஓகே சொல்லிட்டேன் அவரைப் பார்த்தால் கலைஞர் ஞாபகம் தான் வரும்- பிரபல இயக்குநர் கூறிய தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.


பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர், பாடல்கள் & டிரெய்லர்  வெளியானது.  நேற்று  பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


இந்நிலையில் பிரபல சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை இயக்குநர் கிருஷ்ணா அளித்துள்ளார். அதில் நடிகர் சிம்புவின் விரல்களை தேய்க்கும் மேனரிசம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த இயக்குநர் கிருஷ்ணா, "இதை சிம்பு தான் அவராகவே முன்வந்து என்னிடம் அனுமதி வாங்கி செய்தார்.  அந்த மேனரிசம் பெரிய எண்ணோட்டம் கொண்டது. பலம் வாய்ந்த மனிதர்கள் பலரை காணும் போது இந்த மேனரிசம் உள்ளவர்கள் தான். குறிப்பாக கலைஞர் கருணாநிதி இந்த மேனரிசம் செய்து கொண்டே இருப்பார். சிம்பு இந்த மேனரிசம் பற்றி கேட்கும் போது உடனே ஓகே சொன்னேன். எனக்கு கலைஞர் தான் ஞாபகம் வந்தார்." என இயக்குநர் கிருஷ்ணா பதில் அளித்தார்

Advertisement

Advertisement