• Jul 25 2025

கோபிக்கு பணம் கொடுப்பதற்காக பெற்றோல் சைட்டில் வேலை செய்த பாக்கியா மற்றும் எழில்- இது என்ன புது டுவிஸ்டா இருக்கே - வெளியாகிய வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. கணவர் தன்னை விட்டுப் பிரிந்தாலும் ஒரு பெண் தன்னுடைய கௌரவத்தை காப்பாற்ற எப்படிப் போராடுகின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

பெண் என்றால் வீட்டிற்குள்ளே சமைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று இல்லை தனக்கு இருக்கும் திறமையால் பலபேரை வாழவைக்கலாம் என்று எடுத்துக்காட்டாக பாக்கியலட்சுமி வாழ்ந்து வருவதாலே பல ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தொடர்ச்சியாக ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


 அதிலும் பலர் பாக்யா போல இருக்க வேண்டும் என்றெல்லாம் பாக்கியாவை ஃபாலோ பண்ணுவதாக பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.இந்த சீரியலில் தற்பொழுது பாக்கியாவின் மகள் இனியா பிளஸ் டூ பரீட்சையில் நல்ல பெறுபேற்றை எடுத்துள்ளார். ஆனால் பாக்கியா மட்டும் அவருடன் இன்னும் பேசவில்லை.

இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது பாக்கிா எப்போது மீண்டும் வீட்டுக்கு வருவார். இனி சீரியலில் என்ன நடக்கப்போகின்றது என்பதை அறிய ஆவலாக இருக்கின்றனர். இப்படியான நிலையில் பாக்கியாவாக நடிக்கும் சுஜித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினைப் போட்டுள்ளார்.

அதில் பாக்கியா கோபியின் பணத்தைக் கொடுப்பதற்காக தானும் எழிலும் பெற்றோல் சைட்டில் வேலை செய்ததாக ஓர் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement