• Jul 25 2025

வருங்கால கணவருக்காக பிரியா பவானி சங்கர் கட்டிய பங்களா-தீயாய் பரவும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கைவசம் பல படங்களுடன் வளரும் இளம் நடிகைகள் பட்டியலில் இருப்பவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் சீரியல்களில் நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆன அவர் அதன் பின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகம் ரசிகர்கள் பட்டாளமே உள்ளார்கள். அதில் அவருக்கு 3.3 மில்லியன் ரசிகர்கள் உள்ளார்கள்.அவர்களுக்காகவே தொடர்ந்து புகைப்படங்களிலும்  அவர் வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில்  18 வயதில் பீச்சிற்கு சென்றால் இங்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறியுள்ளது என்று தன் காதலருடன் மாறிமாறி முத்தமழை பெய்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

ஈசிஆர் ரோட்டில் நிலம் வாங்கினாலே கோடியில் வாங்கி கோடியில் வீடு கட்டும் நிலை உருவாகும். அதுவும் ஒரு முக்கிய ரோல் படத்துக்கு 20 லட்சம் வாங்கும் நடிகை.

அப்படி எப்படி பெரிய ஆடம்பர பங்களா கோடியில் வாங்கி பிரியா பவானி சங்கர் கட்டியிருப்பார் என்று பயில்வான் விமர்சித்திருந்தார்.

ஆனால் இந்த வீட்டினை சில ஆண்டுகளுக்கு முன்பே பிரியா பவானி சங்கர் வாங்கியிருக்கிறார்.அத்தோடு அங்கு சென்று எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிரிந்துள்ளார்.








Advertisement

Advertisement