• Jul 24 2025

நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்த பிரபலங்கள்- அஜித் குடும்பமும் போயிருக்கிறாங்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை வரிசையாக சினிமா பிரபலங்கள் நேரில் வந்து கண்டு ரசிக்கின்றனர். மறைமுக ஆர்டர் ஏதாவதா? அல்லது அவர்களே விரும்பி பார்க்கின்றனரா என்கிற சந்தேகம் கூட ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயன், த்ரிஷா, மேகா ஆகாஷ், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முந்தைய போட்டிகளை கண்டு ரசித்த நிலையில், நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை நடிகை பிரியங்கா மோகன் நேரில் கண்டு ரசித்தார். அவரை ஏகப்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.


கேப்டன் மில்லர் படக்குழு ஏற்கனவே ஹைதராபாத்தில் நடந்த போட்டியை கண்டு ரசித்த நிலையில், சென்னையில் நடைபெற்ற போட்டியையும் கண்டு ரசித்துள்ளது. பிரியங்கா மோகன் உடன் நடிகர் தனுஷும் சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியை பார்த்து ரசித்தார்.


அவருடன் சென்னையில் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கும் வந்து பார்த்து வரும் நடிகர் சதீஷ் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படமும் தீயாக பரவி வருகிறது.ப்ரியங்கா மோகனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கும் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்தார். குட்டி தல என ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து அவரது போட்டோக்களை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.


நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக்கிற்கு ஸ்போர்ட்ஸ் மேல் அதிக ஆர்வம் உள்ள நிலையில், அவரது அம்மா ஷாலினி கால்பந்தாட்ட போட்டி நடக்கும் இடங்களுக்கும் கிரிக்கெட் போட்டி நடக்கும் இடங்களுக்கும் அழைத்து வருகிறார்.


நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தனது மகன் மற்றும் மகள் இருவரையும் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியை பார்க்க சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு அழைத்து வந்திருந்தார். அந்த காட்சிகள் டுவிட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியா பக்கங்களில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.


Advertisement

Advertisement