• Jul 26 2025

கண்ணம்மாவிற்கு வந்த பேராபத்து... மாமாவிடம் மாட்டிய சித்ரா... அனைவருக்கும் தெரிய வரும் உண்மை... இனி நடக்கப் போவது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'பாரதி கண்ணம்மா' சீரியலின் முதல் பாகத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் 'பாரதி கண்ணம்மா-2' சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் பாகத்திற்கு எந்தளவு வரவேற்பு கொடுத்தார்களோ, அதே அளவு வரவேற்பை இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அந்தவகையில் அக்காவின் திருமணத்தில் கண்ணம்மாவிற்கு பேராபத்து காத்திருக்கின்றது. அதாவது சமையல் முடிந்தால் பந்தியை ஆரம்பிச்சிடலாம், அதனால் பார்த்து வருமாறு கண்ணம்மாவிடம் சண்முகம் கூறுகின்றார். 


அங்கு சென்ற கண்ணம்மாவிற்கு பேரதிர்ச்சி காத்திருக்கின்றது. அதாவது அங்கு கண்ணம்மாவாக இருக்கும் சித்ராவான இவரின் மாமனார் சமைத்துக் கொண்டிருக்கின்றார். அவரை பார்த்ததும் நீ சித்ரா தானே எனக் கூறி மாமனார் துரத்துகின்றார். அவரைக் கண்டதும் கண்ணம்மா ஓடுகின்றார். 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. சித்ரா கண்ணம்மாவாக வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிய வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement