• Jul 24 2025

சம்யுக்தா-விஷ்ணுகாந்தைத் தொடர்ந்து... ரச்சிதாவுடன் உரையாடிய வாட்ஸ் அப் ஆதாரத்தை காட்டிய தினேஷ்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சீரியல் பிரபலங்களான ரச்சிதாவும், தினேஷும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். 

இதனையடுத்து சமீபத்தில் ரச்சிதா தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் கூறி புகார் ஒன்றினை அளித்திருந்தார். இதனையடுத்து இரு சாரரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி இருந்தனர்.


இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தினேஷ் பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறுகையில் "நான் அவரை விரட்டுவதாக என் மீது புகார் கொடுத்திருக்கிறார், ஆனால் உண்மை என்ன என்பதை அவருடன் நான் வாட்ஸ் அப்பில் உரையாடிய சாட்டை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள எனக் கூறி தானும் ரச்சிதாவும் உரையாடிய சாட் ஒன்றை காட்டியுள்ளார்.


மேலும் "இதையெல்லாம் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரே பார்த்துட்டாங்க. குடும்பத்தில் 10,15 முறை பேசிட்டாங்க. பிக் பாஸுக்கு பின் வெளியில் வந்த பின்னராவது சரியாகிடும்னு நினைத்தேன். ஆனால், எதுவும் நடக்கவில்லை"என்றும் அந்தப் பேட்டியில் தினேஷ் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது அந்தத் தொகுப்பாளரிடம் இந்த வாட்ஸ் அப் சாட்டில் நான் ஏதாவது ஆபாசமாக பேசியுள்ளேனா..? எனவும் கேட்கின்றார். அதற்கு அந்தத் தொகுப்பாளர் இல்லை எனக் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement