• Jul 25 2025

'கே.ஜி.எப் 3' படத்தினை முடித்தவுடன் யாஷ் எடுக்கவுள்ள அதிரடி முடிவு.. என்ன தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

கன்னட திரையுலகில் 'Jambada Hudugi' என்ற படத்தின் வாயிலாக கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் யாஷ். இதனையடுத்து இவர் நடிப்பில் எத்தனை படங்கள் வெளியாகியிருந்தாலும், கே.ஜி.எப் திரைப்படம் தான் இந்தியளவில் இவருக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்று தந்தது.


கே.ஜி.எப் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவந்த கே.ஜி.எப் 2 படமும் உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கே.ஜி.எப் 3 எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

இதற்கான வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது மற்றுமோர் வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதாவது யாஷ் பாலிவுட் திரையுலகில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.


இதற்கான கதையினைக் கேட்டு முடிவு செய்துவிட்டதாகவும், யாஷ் நேரடியாக ஹிந்தி படத்தில் என்ட்ரி கொடுக்க தயாராகிவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றன. இருப்பினும் கே.ஜி.எப் 3 படத்தை முடித்த பின் தான் பாலிவுட் படத்தில் நடிப்பார் என்றும் ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement