• Jul 25 2025

'இனிமேல் காசு வாங்கிட்டு வாக்கு போடாதீங்க'..! மேடையில் மாணவர்களுக்கு அட்வைஸ் பண்ண விஜய்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இன்றைய தினம் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பொதுவாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை நீலாங்கரை  சம உழnஎநவெழைn  மையத்தில் சந்தித்து ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகின்றது.

இதில் கலந்து கொண்டு உதவி தொகை வழங்கி வைத்த தளபதி விஜய் மாணவர்கள் மத்தியில் உரையாற்றி இருந்தார்.

அவர் கூறியதாவது ''இங்கிருக்கின்ற மாணவர்களே நாளைய வாக்காளர்கள். நம்ம விரலை வைத்து நம்ம கண்ணையே குத்துகின்ற செயற்பாடே தற்போது நடைபெற்று வருகின்றது. அதுதான் காசு வாங்கி ஓட்டு போடுறது. 

ஒரு வேட்பாளர் தன்னுடைய வாக்குகளுக்காக 15கோடிகளை கொட்டி செலவழிப்வராக இருந்தால் அவர் முன்பு எவ்வளவு கோடிகளை சம்பாதித்திருப்பார் என்று கொஞ்சம் யோசியுங்கள். இது இந்த கல்வி முறையில் கற்று கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.

எனவே  மாணவ மாணவிகளே உங்கள் பெற்றோர்களிடம் போய் சொல்லுங்கள் இனிமேல் காசு வாங்கிட்டு வாக்கு போடாதீங்கள் என்று. ஏன் நான் இப்ப இதை சொன்கிறேன் என்றால் இது எப்ப நடக்குதோ அப்போது தான் உங்கள் கல்வி முறை முழுமை அடைந்ததாக காணப்படும்''.என கூறியிருந்தார்.

Advertisement

Advertisement