• Jul 25 2025

முதன்முதலாக அர்ஜுன் மீது சந்தேகப்படும் கோதை - மாட்டிக் கொண்டு முழிக்கும் அர்ஜுன்- பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஒளிபரப்பாக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அசோஷியேசன் தேர்தலில் தமிழ் ஜெயித்து விட்டார்.

இதனால் அர்ஜுன் தமிழை எப்படியாவது கம்பனியை விட்டு துரத்தியே ஆகவேண்டும் என்று இருக்கின்றார். அத்தோடு கார்த்தியை கைப் பொம்மையாக்கி பல சதித்திட்டங்களையும் செய்து வருகின்றார்.


இது ஒரு புறம் இருக்க தமிழையும் சரஸ்வதியையும் திரும்ப எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு வர வேண்டும் என்று வசுவும் அவரது அம்மா சந்திரகலாவும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ஜுன், தமிழின் கம்பனியில் என்ன நடக்குது என்று அறிய அங்கு வேலை செய்யிற சில பேர்கிட்ட பணம் கொடுத்து கைக்குள் வைத்திருந்தால் நல்லம் என்று சொல்ல கோதை நேர் வழி என்ற ஒன்று இருக்கு அதை விட்டிட்டு இப்படி யோசிக்கிறீங்களே எனத் திட்டுகின்றார்.

மேலும் காரில் தனது கணவருடன் போய்க் கொண்டிருக்கும் போது அர்ஜுனின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கு அவர் மீது எப்பவும் ஒரு கண் வைக்க வேண்டும் என சந்தேகப்படுகின்றார்.இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement