• Jul 25 2025

தற்கொலைக்கு முயன்ற ஜி.பி முத்து - தடுத்து நிறுத்திய நண்பனுக்கு ஏற்பட்ட சோகம்- அவரே கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தூத்துக்குடி மாவட்டத்திற்கு அருகேயுள்ள வெங்கடாசலபுரம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் தான்  ஜி.பி.முத்து,இவர் டிக்டாக் செயலி மூலம் பிரபல்யமானார்.இதனைத் தொடர்ந்து  பிறகு பேஸ்புக், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளில் வீடியோ பதிவேற்றி வருகிறார்.

GP முத்துவுக்கு ரசிகர்கள் பலர் கடிதங்களையும் பரிசு பொருட்களையும் அனுப்பி வருவதையும். அவர் அதை பிரிக்கும் பொழுது எடுக்கும் வீடியோக்கள் மிகவும் பிரபலமாகி வருவதும் உண்டு. இது தவிர ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பிக்பாஸ் சீசன் 6 இலும் கலந்து கொண்டார்.


இருப்பினும் இந்த நிகழ்ச்சியிலிருந்து சில நாட்களிலேயே வெளியேறினார்.இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் குடும்ப வறுமை காரணமா தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அப்போது தடுத்த நண்பன் தற்பொழுது தற்கொலை செய்து கொண்டதாகவும் உருக்கமாக பேசினார்.

 இவரின் இந்தப் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement