• Jul 26 2025

போலீசுடன் வந்த ஜனனி... புதுக் குண்டைத் தூக்கிப் போட்ட குணசேகரன்... அதிர்ச்சியில் சக்தி.. பரபரப்புடன் வெளிவந்த 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பல ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் நேற்றைய தினம் அப்பத்தாவை பாக்க சென்ற ஜனனியை கதிர் இழுத்து வெளியே விட்டிருந்தார்.


இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ விறுவிறுப்புடன் அமர்க்களமாக வெளிவந்திருக்கின்றது. அதில் ஜனனி போலீஸை கூட்டி வருகின்றார். பின்னர் விசாலாட்சியைப் பார்த்து "உங்க மகனை எதிர்த்து எதுவுமே பேச மாட்டீங்க, இப்பவும் பேசாமல் இருங்க" எனக் கூறுகின்றார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் விசாலாட்சி பேசாமல் நிற்கின்றார்.

அதற்கு குணசேகரன் "எங்க அப்பத்தாவை நான் ரொம்ப நன்றாக பார்த்துக்கிறேன், அந்தப் பொண்ணு சொன்னதை எல்லாம் நம்பாதீங்க, அதெல்லாம் பொய்" எனப் போலீஸாருடன் வந்தவர்களிடம் கூறி புதுக் குண்டைத் தூக்கிப் போடுகின்றார். 


அதனைப் பார்த்ததும் ஷக்தி, மற்றும் ஜனனி ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் குணசேகரனை பாக்கின்றனர். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

Advertisement

Advertisement