• Jul 25 2025

ஒப்பாரிப் பாடல் பாடிக் கண்ணீர் வடிக்கும் குணசேகரன்... எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே... சூப்பரான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலில் தற்போது பட்டம்மாளின் 40% ஷேர் தற்போது ஜீவானந்தம் பேருக்கு மாறியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. அதில் குணசேகரன் தன்னை ஜீவானந்தம் சூட் பண்ணுவது போல் கனவு கண்டு கதறி அழுது கத்துகின்றார். இதனையடுத்து கதிர், சக்தி, ஜனனி, கரிகாலன் அனைவரும் ஓடி வருகின்றனர்.


மேலும் கதிர் "பயப்பிடாதீங்க அண்ணா, நான் இருக்கேன்" எனக் கூறி ஆறுதல் தெரிவிக்கின்றனர். பதிலுக்கு நந்தினி "இப்பிடி தான் சொல்லுவீங்க பிறகு அங்க போய்ட்டு அடி வாங்கிட்டு வருவீங்க" எனக் கலாய்க்கின்றார். அதற்கு கதிர் முறைத்துப் பார்க்கின்றார்.


அதுமட்டுமல்லாது கரிகாலன் "சிங்கம் மாதிரி இருந்தீங்க மாமா, உங்கள இப்படி சரிச்சுப் போட்டாங்களே" என குணசேகரனை பார்த்துக் கூறுகின்றார். உடனே குணசேகரன் "நான் பிறந்தேன் மதுரையிலே..." எனப் பாடி ஒப்பாரி வைக்கின்றார். 

இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது.

Advertisement

Advertisement