• Jul 25 2025

சுந்தரியின் கணவர் யார் என்ற உண்மையை கார்த்திக் அனுவிடம் சொல்லி விட்டாரா?- சுந்தரி எடுத்த முடிவு

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி.கார்த்திக் இரண்டாவதாக அனு என்பவரைத் திருமணம் செய்திருக்கும் விடயம் கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் தெரிய வந்து விட்டது. இருப்பினும் அனுவுக்கு கார்த்திக் பற்றி தெரிந்தால் என்ன நடக்கும் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் முக்கியமாகும்.

மேலும் கார்த்திக் பற்றிய அனைத்து உண்மைகளும் சுந்தரியின் ஆத்தாவுக்கு தெரிய வந்து விட்டதால் அவர் கார்த்திக் மீது சரியான கோபத்தில் இருக்கின்றார். மேலும் வாய் பேச முடியாமலும் போனதால் சுந்தரியிடம் கார்த்திக் கட்டிய தாலியை கழட்டி எறிய சொல்கின்றார்.ஆனால் சுந்தரி கழட்டி எறிய மறுத்து விட்டார்.


இப்படியான நிலையில் சுந்தரியைப் பார்க்க வரும் அனுவின் அம்மாவிடம் சுந்தரியின் ஆத்தா கடுமையாக நடந்து கொள்கின்றார். இதனைப் பார்த்த சுந்தரி கார்த்திக்கையே சும்மா விட்டிட்டோம் மல்லிகா அம்மாவுக்கு எதற்கு தண்டனை தரணும் என்று கேட்கிறார்.தொடர்ந்து கார்த்திக் அனுவிடம் சென்று நான் ஒரு உண்மை சொல்லனும் என்று கூறுகின்றார்.

அது என்ன உண்மையாக இருக்கும் ஒருவேளை சுந்தரியின் கணவர் நான் தான் என்று சொல்லி விட்டாரா? அப்படி கார்த்திக் சொன்னால் என்ன நடக்கும் என்பதை எபிஷோட் பார்த்தால் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement