• Jul 25 2025

சிவகார்த்திகேயன் தனது அப்பா அம்மாவுடன் திருச்சியில் வாழ்ந்த வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா-

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் காமெடியனாக தனது கெரியரை ஆரம்பித்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது வசூல் வேட்டை நடத்தும் நடிகராக உயர்ந்துள்ளார். அந்த வகையில் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய டான் மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றன.

இதனை அடுத்து அயலான் மற்றும் பிரின்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இப்படங்களில் பிரின்ஸ் திரைப்படம் விரைவில் ரிலீஸாகக் காத்திருக்கின்றது. 


சிவகார்த்திகேயன் திருச்சியில் இருந்து வந்தவர் என்பது நாம் அனைவருக்குமே தெரியும். அவரது அப்பா ஒரு போலீஸ் அதிகாரி, ஆனால் இப்போது அவர் உயிரோடு இல்லை என்பதை பல பேட்டிகளில் சிவா தெரிவித்திருக்கின்றார்.


தனது மகன் தான் தனது அப்பா என்று சிவகார்த்திகேயன் அடிக்கடி கூறுவதும் உண்டு. இவருக்கு ஆராதனா என்ற பெண் பிள்ளையும் உள்ளது.

இந்த நேரத்தில் தான் சிவகார்த்திகேயன் தனது அப்பாவுடன் வசித்த, அவரது நினைவுகள் உள்ள திருச்சி வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement