• Jul 25 2025

நான் ரொம்ப வலிமையானவள் இப்படித் தான் இருப்பேன்- விஷ்ணுகாந்தை வெறுப்பேற்ற சம்யுக்தா எடுத்த முடிவு- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய  சீரியல்களில் ஒன்று 'சிப்பிக்குள் முத்து'. இதில் நடித்து பிரபலமானார் சம்யுக்தா. இவர் தன்னுடன் இந்த சீரியலில் நடித்த நடிகர் விஷ்ணுகாந்தத்தை காதலித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.இவர்களின் திருமணத்தில், பல சீரியல் பிரபலங்கள் கலந்து கொண்டு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இவர்களுக்கு திருமணம் ஆகி, ஒரு மாதமே ஆகும் நிலையில்இன்ஸ்டாகிராமில் இருந்து திடீர் என தங்களின் திருமண புகைப்படத்தை நீக்கியுள்ளதால், கருத்து வேறுபாடு காரணமாக, இவர்கள் விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


விஷ்ணுகாந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  "இந்த மௌனம் வெறுமையானதல்ல, உண்மை மற்றும் பதில் நிறைந்தது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு காரணம் உண்மையில் விவாகரத்து தானோ என்று கேட்டு வருகின்றனர். மறுபக்கம் சம்யுக்தா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றே வெளியிட்டு உள்ளார்.

 அதில் நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் நினைத்தது நடந்தது என்று, அது நல்லது தான். குறிப்பு இனிமேல் என் வாழ்க்கை தொடங்க போகிறது. மேலும் நீங்கள் யாரும் நினைத்து பார்க்காதது இனிமேல் நடக்கப்போகிறது. அதனால் பெரும் ஏமாற்றத்தை தாங்கும் சக்திக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.


இதனால் இருவருமே பிரிந்து விட்டனர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இப்படியான நிலையில் வலிமையான பெண் தான் எனக்கு குறிப்பிட்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் தமது கமெண்டுகளைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement