• Jul 24 2025

இவருடைய காமெடியைத் திருடி தான் முன்னுக்கு வந்தேன்- தன்னுடைய வெற்றியின் ரகசியத்தைக் கூறிய செந்தில்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முக்கியமான காமெடி நடிகராக வலம் வந்தவர் தான் செந்தில். இவருடைய பெயரை கேட்டாலே நம்மை அறியாமலேயே சிரித்து விடுவோம். அந்த அளவுக்கு கவுண்டமணியிடம் எத்தனை முறை அடி வாங்கி ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பார். இவர் பசி என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகினார்.

அந்த படத்தில் அவருக்கு சிறு கதாபாத்திரம் தான். ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.தொடர்ந்து பாக்கியராஜ் இயக்கத்தில் உருவான தூறல் நின்னு போச்சு என்ற படத்தில் ஒரு வேலையாளாக நடித்திருப்பார். அந்தப் படம் தான் செந்திலின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையில் ஏற்படுத்தியது.


நடிகர் கவுண்டமணியோடு இவர் அடிக்கும்  லூட்டிகளை எந்த நேரத்தில் பார்த்தாலும் நமக்கு சிரிப்பை வரவழைத்து விடும் .இவர்களின் காமெடிக்காகவே ஏராளமான படங்கள் வெற்றி அடைந்ததும் உண்டு. இவர்களுடைய கூட்டணிக்கு ஈடாக எந்த ஒரு நடிகரும் வர முடியாது .அந்த அளவிற்கு இவர்கள் நகைச்சுவை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் செந்தில் ஒரு பேட்டியில் எங்களுடைய காமெடி இந்த அளவிற்கு வெற்றி அடைந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நடிகர் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் நகைச்சுவையை அவ்வப்போது திருடி தான் நாங்கள் படங்களில் கொண்டு வந்திருக்கிறோம். அதேபோல நாகேஷ் அவர்களின் காமெடிகளையும் சில சமயங்களில் வெளிப்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார். 


காமெடியைப் பொறுத்த வரைக்கும் ஒரு நடிகரிடம் இருந்து மாறி மாறி வெளிப்படுத்துவது தான் நகைச்சுவை என்று செந்தில் கூறினார்.இவரின் இந்த பேட்டி தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement