• Jul 23 2025

இவங்களை போல தான் இருக்கணும் என்று நினைச்சேன்- சிம்ரன் குறித்து நடிகை சாய் பல்லவி சொன்ன சுவாரஸியமான விடயம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் சிம்ரன்.விஜய், அஜித், பிரஷாந்த் உட்பட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார்.

அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என்பது சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போது 47 வயதாகும் சிம்ரன் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகை சாய்பல்லவி சிம்ரன் பற்றி பேசி இருக்கிறார். 


"நான் இரண்டாம் ஆண்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது சிம்ரனின் ஒரு படத்தை பார்த்தேன், நான் நடிகை ஆனால் இவரை போல தான் இருக்க வேண்டும் என நினைத்தேன்" என சாய் பல்லவி கூறி இருக்கிறார்.


சாய் பல்லவி பேச்சை கேட்டு நெகிழ்ச்சி ஆன சிம்ரன் டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து கூறி இருக்கிறார். மேலும் சாய் பல்லவி தற்பொழுது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement