• Jul 24 2025

எப்போதுமே எங்களுக்கு தான் தருவார் பிரியாணி என்றால் அவருக்கு உசிரு- விஜய் குறித்து நெகிழ்ந்த சமையல்காரர் முகமது இப்ராஹிம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பான  தற்போது சென்னையில் நடந்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகின.

இந்த வாரிசு படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் தனது ரசிகர்களைச் சந்தித்து வருகின்றார். அந்த வகையில் இன்று செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.


அடையாள அட்டை வைத்துள்ள மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே இந்த சந்திப்புக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.நிர்வாகிகளுக்கு மதிய உணவாக மட்டன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த பிரியாணியை சமைத்த முகமது இப்ராஹிம் இதுகுறித்து பேசுகையில்,"கடந்த 7,8 வருடங்களாக தளபதிக்கு நாங்கள் தான் பிரியாணி சமைத்துக்கொடுத்து வருகிறோம்.


 எப்போதுமே எங்களுக்கு தான் ஆர்டர் கொடுப்பார். இன்னைக்கு பிரியாணி நல்லா இருந்தது என சொன்னாரு. ரொம்ப சந்தோஷமா இருந்தது. எங்களுக்கு சலாம் சொன்னாரு. மேலும் மேலும் அவர் நல்லபடியாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறோம்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement