• Jul 24 2025

நான் அப்படிப் பேசினாலே சிரிக்கின்றார்கள் இனிமேல் பேசப்போவது இல்லை - நடிகை ஹன்சிகாவின் முடிவால் ஷாக்கான ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் ஹன்சிகா. இவர் இதனைத் தொடர்ந்து மாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் இறுதியாக மஹா என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இப்படியான சூழ்நிலையில் இவர் கடந்த வருடம் டிசம்பரில் திருமணம் செய்து கொண்டார்.திருமணம் ஆகி நான்கே நாளில் மீண்டும் அவர் ஷூட்டிங்கிற்கு கிளம்பி சென்றுவிட்டார். அவர் தற்போது கைவசம் கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்கள் வைத்து இருக்கிறார்.


தமிழ் சினிமாவுக்கு வந்து 13 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில் இன்னும் தமிழ் சரியாக பேசுவதில்லையே என அவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டிருக்கிறார்கள்.

"நான் தமிழில் பேசினால் செட்டில் எல்லோரும் சிரிக்கிறார்கள். அதனால் பேசுவதில்லை. சொல்லித்தரும் வசனத்தை மட்டும் பேசிவிடுவேன்" என கூறி இருக்கிறார்.தமிழ் ஓரளவு நன்றாக பேசினாலும் மற்றவர்கள் சிரிக்கிறார்கள் என்பதற்காக ஹன்சிகா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement