• Jul 24 2025

இப்படி என்றால் எப்படி திருமணம் நடக்கும்- காளையன் சொன்ன பதிலால் ஷாக்கான ஷிவாங்கி- என்னையா சொல்லுறீங்க....

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இந்த வருடம் ஆரம்பித்ததில் இருந்து பல ரியாலிட்ரி ஷோக்கள் ஆரம்பித்து ஒளிபரப்பாகி வருகின்றது. அந்த வகையில் அண்மையில் ஆரம்பமாகிய நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி சீசன் 4. இந்த நிகழ்ச்சியிலிருந்து இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி வெளியேறியுள்ளனர்.

அந்த வகையில் இதில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர் தான் காளையன். இவர் சுல்தான், ஜிகர்தண்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் புகழ், ஜி.பி.முத்து, குரேஷி போன்றவர்களை அடித்து உதைத்து தொடர்ந்து காமெடி செய்து கொண்டிருக்கிறார்.


 அவர்களும் அடிவாங்குவதையே கன்டென்ட் ஆக மாற்றி வருகின்றனர்.இன்றைய குக் வித் கோமாளி எபிசோடில் காளையனிடம் சிவாங்கி பேசினார். 'நீங்கள் இளமையாக இருந்தபோது உங்கள் பின்னால் பெண்கள் சுற்றினார்களா' என சிவாங்கி கேட்க, 'ஆமாம், ஆனால் யாரையும் நான் லவ் பண்ணல' என கூறுகிறார்.


மேலும் தனக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை என கூறிய காளையன், தான் ஒரு பெண்ணை ஓகே செய்தால் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி விடுகிறது. அதனால் தான் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கிறேன் என காளையன் கூறி இருக்கிறார். அவருக்கு திருமணமே ஆகவில்லை எனபதை கேட்டு சிவாங்கி தான் ஷாக் ஆனார என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement