• Jul 24 2025

சிம்பு தான் இதை சொல்லிட்டு இப்போ பெல்டி அடிக்கிறாரு- ஸ்ரோங்கான குற்றச்சாட்டை வைத்த பிரபலம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சிம்பு. இவர் குறித்த தகவல் ஒன்று தான் தற்பொழுது பரவலாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருந்தார். 

ஆனால் அவர் படத்தில் நடித்தால் நாங்கள் படத்திலிருந்து விலகிடுவோம் என கார்த்தி விக்ரம் ஜெயம் ரவி கூறியதால் தான் மணிரத்னம் சிம்புவை பொன்னியின் செல்வன் திரைப்படத்திலிருந்து விலக்கியதாக தகவல் வெளியாகியிருந்தது. இதனை சிம்புவே வலைப்பேச்சு என்னும் யூடியூப் பிரபலம் ஒருவரிடம் கூறியதாக கூறப்பட்டது

ஆனால் இது பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது சிம்பு அதனை தான் கூறவில்லை என பெல்டி அடித்து விட்டார் என்றும் அவங்க அப்படித் தான் கூறுவார்கள் இதெல்லாம் பொய் நம்பாதீங்க என ஜெயம் ரவியிடம் போன் செய்து பேசியதாகவும் பிரபல விமர்சகர் ஒருவர் தெரிவித்துள்ளார்


மேலும் அவர் தெரிவிக்கையில் சிம்பு கூறியதைத் தான் நாம் கூறினோம். சிம்பு இரட்டை வேடம் போடுகின்றார். சிம்பு தானே கூறி விட்டு எதற்கு பொய் சொல்கின்றார் என்று தெரியவில்லை. சிம்பு ஒரு படத்தையும் சொன்ன டைம்ல நடிச்சு முடிச்சது இல்லை. இதற்கும் அவர் தான் ஒரு விளக்கத்தை கூற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement