• Jul 25 2025

கீழே விழுந்ததால் வலியால் துடித்த ஜஸ்வர்யா...பணம் இல்லாமல் திணறும் கண்ணன்...பரபரப்பு திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் அண்ணன் தம்பி ஒற்றுமையாக நகர்ந்து வரும் கதைக்களத்தில் மீனாவின் தங்கை திருமணம் மூலம் பிரிந்த குடும்பம் கதிர்-முல்லை வளைகாப்பு நிகழ்ச்சியால் இணையும் என தனம், கதிர் நினைத்தார்கள்.

ஆனால் வளைகாப்பு நிகழ்ச்சியால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை, அவரவர் முன்பு எடுத்த முடிவில் தெளிவாக உள்ளார்கள். எனினும் இப்போது கதைக்களத்தில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் பரபரப்பு ப்ரமோ ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது கண்ணணும் ஜஸ்வர்யாவும் டான்ஸ் ஆடி வீடியோ போடும் போது ஜஸ்வர்யா தவறுதலாக கீழே விழுந்து விடுகின்றார்.

இதன் பின் வலி தாங்கிக்கொள்ள முடியாமல் கத்த அவரை கண்ணன் ஹாஸ்பிட்டலிற்கு கூட்டிட்டு போகின்றார்.அங்கு மருந்து வாங்கிக் கொண்டு வாங்க என சொல்ல கண்ணணும் கார்டை கொடுக்கின்றார்.ஆனால் அதில் பணம் ஒன்றும் இல்லை கண்ணனிடமும் இல்லை இதனால் அடுத்து கண்ணன் என்ன முடிவு எடுக்கப்போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement