• Jul 24 2025

பிக்பாஸ் வீட்டில் கண் கலங்கி அழுத கமல்... எல்லாத்துக்கும் காரணம் விக்ரமன் தான்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று 'பிக்பாஸ்'.  இந்நிகழ்ச்சியில் சீசன் 6ஆனது தொடங்கி 76 நாட்கள் நிறைவடைந்து விட்டது. 21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது வரை 11 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். 

அந்தவகையில் தற்போது பத்து போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து டாஸ்க்குகளின் மூலமாக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் கடந்த வாரம் ஜனனி வெளியேறிய நிலையில் இந்தவாரம் யார் வெளியேறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் பேசுகையில் விக்ரமன் நம்முடைய பெரிய தகப்பன் ஒருவருக்கு கடிதம் எழுதினார் எனக் கூறுகின்றார். அதற்கு உடனே விக்ரமன் எழுந்து "அம்பேத்கர் தனக்காக ஒரு பைசா கூட சேர்த்து வைக்காத ஒரு தந்தை, கேட்க நாதியற்ற சனத்திற்காகப் போராடினார்" எனக் கூறுகின்றார்.

இதனைக் கேட்டதும் கமல் கண் கலங்கி அழுகின்றார். பின்பு ஒரு காகிதத்தை தனது பாக்கட்டில் இருந்து எடுத்து "இது ஒரு பழைய கடிதம், 90 களில் எழுதியது, உங்களைப் போலவே எனக்கும் இந்தக் கடிதத்தை எழுதும் போது கண்கள் கலங்கி விட்டன" எனக் கூறுகின்றார்.

அதுமட்டுமல்லாது கண்கள் கலங்கியவாறே அந்தக் கடிதத்தை வாசிக்கின்றார். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. 


Advertisement

Advertisement