• Jul 25 2025

விக்ரமனைப் பார்த்து கமல்ஹாசன் பயப்படுகின்றார்- பரபரப்புத் தகவலைத் கூறிய பயில்வான் ரங்கநாதன்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது.விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். மேலும் ஜி.பி. முத்து தாமாக முன் வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். 

பின்னர் அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி உள்ளிட்டோர் எலிமினேட் செய்யப்பட்டனர். இதில் தற்போது 15 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 45-வது நாட்களை நெருங்கியுள்ளது.இதில் இந்த வாரத்திற்கான டாஸ்க்கில் பிக்பாஸ் வீடு நீதிமன்றமாக மாறியுள்ளது.


இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து கேமரா முன்பு தங்களது புகார்களை தெரிவித்து யார் தங்களுக்காக வாதாட வேண்டும் என்பதையும் தெரிவிக்குமாறு கூறப்பட்டது.இதனால் ஒவ்வொருத்தராக தமது வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.


இந்த நிலையில் கமல்ஹாசன் குறித்து புதிய தகவலை பயில்வான் தெரிவித்துள்ளார்.அதாவது விக்ரமன் அரசியல்வாதியாக இருப்பதால் கமல்ஹாசன் பயப்படுகின்றார்.இதனால் விக்ரமன் என்ன தவறு செய்தாலும் கமல்ஹாசன் கண்டிக்காமல் நடந்து வருகின்றார் என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement