• Jul 25 2025

பர்ஸ்ட் நைட்டில் கதறி அழும் கரிகாலன்... உண்மையைக் மறைக்க சொல்லி மிரட்டும் ஆதிரை... அட்டகாசமான 'எதிர்நீச்சல்' ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக 'எதிர்நீச்சல்' மாறியுள்ளது. இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளிவந்துளளது.


அதில் பர்ஸ்ட் நைட் ரூமில் கரிகாலன் விம்மி விம்மி அழுகின்றார். மேலும் ஆதிரை "பர்ஸ்ட் நைட் நடந்திடிச்சா என்று யாராவது கேட்டால் எல்லாம் நல்ல படியாய் முடிஞ்சுது அப்படி என்று நீ சொல்லணும்" என்கிறார். பதிலுக்கு கரிகாலன் அழுதபடியே "நான் பாவம் இல்லையா" எனக் கேட்கின்றார்.


பின்னர் "மாமா எல்லாம் முடிஞ்சு போச்சுயா" எனக் கதறியபடியே ரூமை விட்டு வெளியே செல்கின்றார். மறுபுறம் குணசேகரன் "ஏன் இப்படி முழிக்கிறாய்" எனக் கரிகாலனிடம் கேட்கின்றார். அதற்கு கரிகாலன் நேற்று என இழுக்கின்றார். பதிலுக்கு குணசேகரன் "நேற்று வியாழக்கிழமை இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதுக்கென்ன" என்கிறார்.


அந்த சமயத்தில் அங்கு ஜான்சிராணி வருகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement