• Jul 25 2025

படக்குழுவினருக்கு தங்கக்காசினை பரிசாக வழங்கிய கீர்த்தி சுரேஷ்- அடடே உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு மேடம்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரபுவர் தான் கீர்த்தி சுரேஷ்.இவர் நடிப்பில் தற்போது தமிழில் மாமன்னன், சைரன், ரிவால்டர் ரீட்டா, ரகுதாதா போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. 


இதில் மாமன்னன் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி. அதேபோல் சைரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதுதவிர அவர் நடிப்பில் உருவாகி வரும் ரிவால்டர் ரீட்டா மற்றும் ரகுதாதா ஆகிய இரு படங்களுமே கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களாகும்.


தமிழைப் போல் தெலுங்கில் போலா ஷங்கர் மற்றும் தசரா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி. இதில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்து வருகிறார். இது அஜித் நடித்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மற்றொரு தெலுங்கு படமான தசராவின் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தின் ஷூட்டிங் அண்மையில் தான் நிறைவடைந்தது.


இந்நிலையில், தசரா படத்தின் ஷூட்டிங் நிறைவு நாளின் போது நடிகை கீர்த்தி சுரேஷ் செய்த தங்கமான செயல் ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அது என்னவென்றால், அப்பட ஷூட்டிங் நிறைவு நாளின் போது அப்படத்தில் பணியற்றிய சக நடிகர்கள், டெக்னீஷியன்கள் என 130 பேருக்கு தலா 2 கிராம் தங்கக்காசு பரிசாக வழங்கி இருக்கிறார். அவர் செய்த இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Advertisement

Advertisement