• Jul 25 2025

அந்த நடிகரின் படத்தால் என் வாழ்க்கையே பாலா போயிருக்கும்...புலம்பிய நடிகர் நெப்போலியன்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்தவர் நடிகர் நெப்போலியன். சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் சினிமாவைத் தாண்டி அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். அந்தவகையில் திமுக ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கின்றார்.

பின்னர் தன் மகனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைபாடு காரணமாக அரசியலை விட்டும் விலகிய நெப்போலியன், தற்போது குடும்பத்துடன் அமெரிக்கா சென்று அங்கு செட்டில் ஆகிவிட்டார். 

அதுமட்டுமல்லாது அமெரிக்காவில் சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர், அதேநேரத்தில் விவசாயமும் செய்து வருகிறார்.ரஜினிகாந்த் நடிப்பில் எஜமான் படத்தில் நெப்போலியன் வில்லன் ரோலில் நடித்திருப்பார்.

மேலும் அப்படித்தின் போது நடந்த சில விசயங்களை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியொன்றில், எஜமான் படம் வெளியான சமயத்தில் தனக்கு பெண் பார்க்கும் படலம் ஏற்பட்டு செய்யப்பட்டது. என் மனைவியிடம் மாப்பிள்ளை யார் என்று விசாரிக்க அவர் ஒரு நடிகர் அவர் பெயர் நெப்போலியன் என்று தெரிவித்துள்ளனர் பெற்றோர்கள்.

உடனே அவர் ஐய்யோ எஜமான் படத்தில் கருவில் குழந்தையை அழிக்க நினைத்தவன் கூட போய் என்னை வாழச்சொல்றீங்களே என்று என்னை திருமணம் செய்ய வேண்டவே வேண்டாமெ ன்று கூறிவிட்டாராம். அதன்பின் வெளியில் நெப்போலியனை பற்றி விசாரித்து தன்னை திருமணம் செய்ய ஒற்றுக்கொண்டார் என நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement