• Jul 25 2025

நான் வரல... என்னால யாரையும் ஏத்துக்க முடியாது... கத்திக் கதறி அழும் தனலட்சுமி... வெளியானது ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போ என்ன நடக்கும், எப்பிடி நடக்கும் என்று யாராலுமே கண்டு பிடிக்க முடியாது. ஏனெனில் இன்று சிரித்து கொண்டிருக்கும் போட்டியாளர்கள் சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொண்டிருப்பார்கள்.

அந்தவகையில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது உண்மை முகத்தை தற்போது காட்டத் தொடங்கி உள்ளார்கள். இதுவரை காலமும் அமைதியாக இருந்தவர்கள் கூட சண்டை போடத் தொடங்கி விட்டார்கள். எதிர்பாராத திருப்பங்கள் நாளுக்கு நாள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன. 


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் இந்த வாரத் தலைவருக்கான டாஸ்க் இடம்பெறுகின்றது. அந்தவகையில் தலைவராக மைனா தேர்ந்தெடுக்கப்படுகின்றார். இதனைக் கேட்டதும் பெட்டின் மேல் உட்கார்ந்து கதறி அழுகின்றார். 

அதாவது இந்த விளையாட்டுக்கு நான் வரல, என்னால யாரையும் தலைவராக ஏத்துக்க முடியாது" எனக் கூறி அழுகின்றார். அதற்கு உடனே ரச்சிதா "மேல போகலை" எனக் கூறுகின்றார். அதற்கு உடனே தனலட்சுமி "நீ பேசாதே" எனக் கத்துகின்றார். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ ஆனது அழுகையுடன் வெளிவந்து இருக்கின்றது.  

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement