• Jul 25 2025

ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து -இயக்குநர் செல்வராகவன் போட்ட திடீர் டுவிட்- மிரண்டு போன நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் தான் இயக்குநர் செல்வராகவன். இவர் தற்பொழுது படங்களிலும் நடித்து வருகின்றார். அந்த வகையில் சாணிக்காயிதம் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.இது தவிர இவர் நடித்துள்ள 'பகாசூரன்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. 

இவர் இயக்கிய 'நானே வருவேன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர் தற்போது 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரெளபதி','ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் 'பகாசூரன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.


இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில்,"எத்தனையோ நாள் நாம் நிம்மதியாய் இருந்திருக்கிறோம். கடவுளின் அருள். ஆனால் அதை பெரிதாய் பொருட்படுத்துவதில்லை. 

என்றோ ஒரு நாள் பிரச்சனை என்றால் " ஐயோ அம்மா கடவுளே காப்பாத்து" தான்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் 'கஷ்டத்தில் தான் கடவுள் நியாபகம் வருகிறது' என்று கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement