• Jul 25 2025

முல்லை மற்றும் ஐஸ்வர்யாவைத் தொடர்ந்து கர்ப்பமான தனம்- கிண்டலுக்குள்ளான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். 4 அண்ணன் -தம்பிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் என இந்தத் தொடர் குடும்ப உறவின் முக்கியத்துவத்தை பேசுகிறது.

தொடரில் அண்ணன் -தம்பிகளின் ஒற்றுமையை குலைக்கும்வகையில் உறவினர்கள் காய் நகர்த்த, அதிலிருந்து மீண்டு எவ்வாறு ஒற்றுமையை அவர்கள் தக்க வைக்கிறார்கள் என்பதே கதைக்களமாக உள்ளது.


இந்தக் குடும்பத்தை தாங்கிப் பிடிக்கும் தூண்களாக மூத்த அண்ணன் மற்றும் அண்ணி, மூர்த்தி மற்றும் தனம் உள்ளனர். குடும்பத்தில் ஏற்படும் சலசலப்புகளை அவர்கள் தீர்த்து வைக்கின்றனர்.

இதில் சில காலங்கள் கதிர் வீட்டை விட்டு வெளியேற, அவரும் குடும்பத்தினருடன் சேரும்வகையில் எப்படி உழைக்கிறார் என்பதாக கதை நகர்ந்தது.இப்படி ஒரு நிலையில் முல்லைக்கு குழந்தை பிறக்காது என டாக்டர் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது முல்லை கர்ப்பாகியுள்ளார். அவரைத் தொடர்ந்து கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவும் கர்ப்பமாக உள்ளார்.


இதனால் குடும்பமே குஷியாக இருக்கின்றனர். இப்படியான ஒரு நிலையில் தற்பொழுது தனமும் கர்ப்பமாக உள்ளதாக டாக்டர் தெரிவித்துள்ளார். ஆனாலும் தனம் தனது அம்மாவைத் தவிர யாருக்கும் இந்த விடயம் தெரியக்கூடாது என்று மறைத்து விடுகின்றார்.இவ்வாறு முல்லை, ஐஸ்வர்யா, தனம் ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் கர்ப்பமாகி இருப்பது ரசிகர்களையே கடுப்படையச் செய்வதோடு பலரும் கிண்டலடித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement