• Jul 25 2025

பாகுபலியிடம் தோற்றுப்போன பொன்னியின் செல்வன்.. எந்த விஷயத்தில் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் இப்படம் வெற்றிபெற்றது. வசூலில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்தது.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2 வருகிற 28ஆம் தேதி வெளியாகிறது. 

பொன்னியின் செல்வன் வெளிவந்த சமயத்தில் பாகுபலி படத்துடன் இப்படத்தை ஒப்பிட்டு வந்தனர். இந்நிலையில், முக்கிய விஷயம் ஒன்றில் பாகுபலி படத்திடம் பொன்னியின் செல்வன் படம் தோற்றுப்போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் பாகுபலி 2 படத்தை விட பொன்னியின் செல்வன் படத்திற்கு மக்கள் கூட்டம் குறைவாக தான் வந்துள்ளார்கள் என தெரிவிக்கின்றனர். பாகுபலி 2 படத்தை தமிழ்நாட்டில் 1.45 கோடி மக்கள் பார்த்துள்ளதாகவும், பொன்னியின் செல்வன் படத்தை 1.40 கோடி மக்கள் பார்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனால், கண்டிப்பாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பாகுபலியின் இந்த சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement