• Jul 26 2025

"ஆசைக்கு இணங்காவிட்டால் அந்த மாதிரிப் புகைப்படங்களை வெளியிடுவோம்".. பிரபல நடிகைக்கு மிரட்டல்.. தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

மேற்கு வங்காளத்தின் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. பல படங்களில் நடித்த இவர் தற்போது 'ஷிப்பூர்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படமானது விரைவில் திரைக்கு வர உள்ளது. 


இந்நிலையில் இந்த திரைப்படத்தின் உடைய தயாரிப்பாளரும் அவரது உதவியாளர்களும் தங்கள் ஆசைக்கு இணங்கும்படி தன்னை மிரட்டுவதாக நடிகை ஸ்வஸ்திகா போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆசைக்கு இணங்க மறுத்தால் மார்பிங் செய்த என் நிர்வாண புகைப்படத்தை ஆபாச இணையதளத்தில் பதிவிட்டுவிடுவோம் என தயாரிப்பாளரும் அவரது உதவியாளர்களும் இமெயில் மூலம் மிரட்டுவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.


இவர் அளித்த இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நடிகைக்கு மிரட்டல் விடுத்த உதவி தயாரிப்பாளர் தற்போது அமெரிக்காவில் உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement