• Jul 25 2025

5 நிமிஷம் பொறுமையாக இருப்பீங்களா- குல தெய்வ கோயிலுக்கு வந்த நயன்தாராவைக் கடுப்பாக்கிய ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கதைக்கும், கதாநாயகிக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.இவர் கடந்த ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆன சில மாதங்களில் வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்கள். இந்த நிலையில் அண்மையில் தங்களது இரண்டு குழந்தைகளின் பெயர்களை சமீபத்தில் அறிவித்தனர். அதன்படி ஒரு ஆண் குழந்தைக்கு உயிர் ருத்ரோனில் N சிவன் என்றும் மற்றொரு ஆண் குழந்தைக்கு உலக் தெய்வீக் N சிவன் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.


இதில் N என்பது உலகின் சிறந்த தாயான நயன்தாராவை குறிக்கும் என விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அவர்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.


இந்நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளுடன் குல தெய்வ வழிபாடு செய்ய தஞ்சைக்கு வந்தனர்.அப்போது ரசிகர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததோடு போட்டோக்கு போஸ் கொடுக்கவும் சொல்லியிருந்தனர். இதனால் கடுப்பான நயன்தாரா ஒரு 5 நிமிஷம் பொறுமையாக இருக்கிறீங்களா ப்ளீஸ் என கேட்டுள்ளார். அதன் பிறகே ரசிகர்கள் அமைதியாகவும் இருந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement