• Jul 25 2025

அந்த விஷயத்தில் பலர் முன் அவமானப்படுத்திய ராதிகா.. பதிலுக்கு சவால் விட்ட பாக்கியா.. இனி நடக்கப் போவது என்ன..? ப்ரோமோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி' சீரியல். இதில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிறைந்த வண்ணம் தான் இருக்கின்றன. இதனால் அடுத்து என்ன நடக்கப் போகுது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். 

அந்தவகையில் ராதிகாவின் ஆபீஸில் கேண்டீன் டெண்டர் விட்டிருக்கும் செய்தியைப் பார்த்து பாக்கியா ஜெனியை அப்ளை பண்ண சொல்ல அவரும் அப்ளை பண்ணி இருக்கின்றார். ஆனால் ராதிகாவிற்கோ இதில் கொஞ்சமும் விருப்பமில்லை.


இந்நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் அந்த  கேண்டீன் காண்ராக்டை( contract) ஐ பாக்கியாவிடம் கொடுப்பதாக ஆபீஸில் கூறுகின்றனர். அதனைக் கேட்டதும் உடனே அங்கிருந்த ராதிகா பாக்கியாவை அவமானப்படுத்தும் நோக்கில், பாக்கியாவிற்கு ஆங்கிலம் பேசத் தெரியாது என்பது தெரிந்தும், ஆங்கிலத்தில் பாக்கியாவிடம் கேள்விகளைக் கேட்கின்றார்.


அதற்கு பாக்கியாவோ பதில் சொல்ல முடியாமல் தட்டித் தடுமாறுகின்றார். அதன் பின்னர் ராதிகா "இங்கிலீஷ் தெரியாமல் எப்படி சேர்" என அந்த ஆபீஸ் அலுவலர்களிடம் கூறுகின்றார். 


பின்பு பாக்கியா "பிறக்கும் போதே எல்லாத்தையும் புரிஞ்சிட்டு தான் பிறக்கிறோமா..? ஏதாவது தேவை என்று வரும் போது தானே தெரிஞ்சுக்கிறோம். அதேமாதிரி இதையும் தெரிஞ்சுக்கிறேன்" எனக்கூறி ராதிகாவிடம் சவால் விடுகின்றார். இதனைக் கேட்டதும் ராதிகா கோபத்தில் முகத்தை சுளிக்கின்றார். இவ்வாறாக இந்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.  


Advertisement

Advertisement