• Jul 25 2025

கரிகாலனுக்கு பெரிய விருந்து வைத்த ஜான்சி ராணி- சொத்து பிரச்சினை பற்றி ஜனனிக்கு கௌதம்கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 2 years ago

Advertisement

Listen News!


சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக 'எதிர்நீச்சல்' மாறியுள்ளது. இந்த சீரியலில் ஆதிரைக்கு சமீபத்தில் கரிகாலனுடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.  ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் பெஸ்ட் நைட் நடக்க குணசேகரன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் பெஸ்ட் நைட்டில் ஆதிரை எனக்கு அருணைத் தான் பிடிக்கும் என்று சொன்னதால் கரிகாலன் அழுது கொண்டிருந்தார்.


இதனை அடுத்து இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஆதிரைக்கும் கரிகாலனுக்கும் பெஸ்ட் நைட் முடிந்து விட்டது என நினைத்து ஜான்சி ராணி கரிகாலனுக்கு பெரிய விருந்து வைக்கின்றார். இதனைக் கேட்டு நந்தினி எல்லோரும் சிரிக்கின்றனர். கரிகாலனுக்கு வைத்த முட்டை உருண்டு ஓடி விட குணசேகரன் விரட்டிப் பிடி என்கின்றார்.


தொடர்ந்து கௌதமிடம் சொத்து பிரச்சினை பற்றி கேட்க அவர் இதெல்லாம் உங்களுக்கு வேணாம் என்று சொல்ல ஜனனி முடியாது கௌதம் என்று சொல்கின்றார்.இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.

Advertisement

Advertisement