• Jul 23 2025

காதல் விவகாரத்தால் இயக்குநரையே பகைத்துக் கொண்ட ராஷ்மிகா மந்தனா- அதுக்குள்ள எல்லாத்தையும் மறந்திட்டாங்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் ராஸ்மிகா மந்தனா. இவர் தற்பொழுது தெலுங்கு,தமிழ் என்ற இரு மொழிகளிலும்  மாறி நடித்து வருகின்றார்.சுல்தான் திரைப்படத்தில் நடித்த பிறகு தமிழிலும் ராஷ்மிகாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

இதனை அடுத்து விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக நடித்திருந்தார். விஜய்யின் பெரும் ரசிகை என்பதால் ஒரு படமாவது விஜய்யுடன் நடித்து விட வேண்டும் என்று ஆர்வத்தில் இருந்தார். அந்த நிலையில் வாரிசு படத்தில் வந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டார்.


ஆனால் அவரை சினிமாவிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. சில காலங்களுக்கு முன்பு அவர் இயக்கி வெளியான காந்தாரா திரைப்படம் இந்தியா அளவில் பெரிதாக பேசப்பட்டது. பெரும் வசூலையும் ஈட்டி கொடுத்தது.

தமிழ் நடிகர் ரஜினிகாந்தில் துவங்கி பல நடிகர்களும் பிரபலங்களும் அந்த படத்திற்காக ரிஷப் ஷெட்டியை வாழ்த்தியிருந்தனர். ஆனால் ராஷ்மிகா மட்டும் எந்த ஒரு வாழ்த்துக்களும் தெரிவிக்கவில்லை. பிறகு ஒரு முறை பத்திரிகையாளர்கள் அவரிடம் காந்தாரா திரைப்படம் குறித்து கேட்ட பொழுது அந்த படத்தை நான் பார்க்கவே இல்லை எனக் கூறிவிட்டார் ராஷ்மிகா.


ஏன் அவர் அப்படி கூறியுள்ளார் என பார்க்கும் பொழுது அந்த படத்தின் திரைக்கதையில் ரக்‌ஷத் ஷெட்டி என்னும் நடிகர் வேலை பார்த்துள்ளார். ரக்‌ஷத் ஷெட்டியும் ராஷ்மிகாவும் சேர்ந்து ஒரே படத்தில் தான் அறிமுகமானார்கள்.

அப்போது ராஷ்மிகாவுக்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது அது நிச்சயதார்த்தம் வரை சென்று பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். இந்த காரணத்தினால்தான் காந்தாரா திரைப்படம் குறித்து ராஷ்மிகா எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

Advertisement