• Jul 25 2025

சமந்தா இடத்தை பிடித்த ராஷ்மிகா மந்தனா....! எப்படின்னு தெரியுமா? இதான் விஷயமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் வாரிசு.

இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் தமிழில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் 'ரயின்போவ்'.ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை சாந்தரூபன் என்பவர் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குநர் தேசிங் பெரிசாமியின் துணை இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தில் முதன் முதலில் கதையின் நாயகியாக நடிக்கவிருந்தவர் நடிகை சமந்தா தானாம்.

ஆனால், திடீரென அவரால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதிலாக நடிகை ராஷ்மிகா மந்தனா அந்த இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாராம்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.


Advertisement

Advertisement