• Jul 23 2025

தன்னிடமிருந்து பணமோசடி செய்த மேனேஜர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்த ராஷ்மிகா - இத்தனை லட்சம் எடுத்திருக்கின்றாரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக இருந்து வருபவர் தான் ராஷ்மிகா மந்தனா.நேஷ்னல் க்ரஷ் என சொல்லும் அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. தமிழில் இறுதியாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்திருந்தார்.

மேலும் ஹிந்தி சினிமாவிலும் அவர் நடித்து வருகிறார்.அடுத்து ராஷ்மிகா அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2, ரன்பீர் கபூர் உடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் நீண்ட காலமாக ராஷ்மிகாவின் மேனேஜர் ஆக இருந்து வந்த நபர் தற்போது நீக்கப்பட்டு இருக்கிறாராம். அவர் தன்னிடம் பணமோசடி செய்தது தெரியவந்ததால் தான் ராஷ்மிகா கடும் கோபத்தில் அவர் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.

ராஷ்மிகாவிடம் சுமார் அவர் 80 லட்சம் அளவுக்கு அவர் மோசடி செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement