• Jul 25 2025

அருணைத் தடுக்க புதுப் பிளான் போடும் ஜனனி... அதிர்ச்சியில் ரேணுகா மற்றும் நந்தினி... வெளியானது ஸ்பெஷல் ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்றான எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இறுதியில் ஆதிரை கல்யாணம் யாருடன் நடக்கும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் தற்போது ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் நந்தினி, ரேணுகா, ஜனனி ஆகிய மூவரும் பேசிக் கொள்கின்றனர். அதாவது ஆதிரை-கரிகாலன் கல்யாணப் பத்திரிகையை கையில் எடுத்த ஜனனி "நடக்காத கல்யாணத்திற்கு எதுக்குப் பத்திரிகை" எனக் கேட்கின்றார். 


பின்னர் நந்தினியும், ரேணுகாவும் "இந்த அரசிட பேச்சைக் கேட்டு அருணும் ஆதிரையோட கல்யாணம் வேணாம் என்று போய்டுவானோ" எனக் கேட்கின்றனர். அதற்கு ஜனனி "போக விட்டால் தானே" என்கிறார். பதிலுக்கு "என்ன செய்யப் போகிறாய்' என நந்தினி, ரேணுகா கேட்க "சொல்ல மாட்டன் பாருங்க" எனக் கூறி அதிர்ச்சி கொடுக்கின்றார் ஜனனி. இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்திருக்கின்றது. 

Advertisement

Advertisement