• Jul 24 2025

நயனின் இரட்டைக் குழந்தைகளுக்காக ஷாருக்கான் செய்த செயல் - சென்னை வந்தபோது நடந்த சம்பவம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா.இவர் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் மட்டுமல்லாது சோலோ ஹீரோயினாகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இவரது நடிப்பில் இறுதியாக கனக்ட் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இதனை அடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகின்றார்.ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளியாகிய பதான் திரைப்படம் இதுவரை 1000 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது இதனால் ஜவான் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.


சமீபத்தில் சென்னை வந்த ஷாருக்கான் நடிகை நயன்தாரா வீட்டுக்கு சென்று இருந்தார். அவரை காண ரசிகர்களும் அதிகம் பேர் அங்கு கூடிவிட்டனர். ஷாருக்கான் எதற்காக வந்தார் என்கிற காரணம் வெளியாகி இருக்கிறது.


நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்க்க தான் அவர் வந்தாராம். அவரை நயன்தாரா வெளியில் வந்து வழியனுப்பி வைத்த வீடியோவும் சில தினங்களுக்கு முன்பு வைரலானது . மேலும் விக்னேஷ் சிவன் படத்தில் அஜித் நடிக்க மறுத்ததால் நயன் அஜித் மீது செம கோபத்தில் இருக்கின்றாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement