• Jul 25 2025

கட்டியணைத்து ரொமான்ஸ் பண்ணும் ஷிவானி... கதறிக் கண்ணீர் வடிக்கும் வெண்ணிலா... தனியாக அழும் சூர்யா... கவலையின் உச்சத்தில் 'காற்றுக்கென்ன வேலி'..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இளைஞர்கள் ரசிக்கும் ஒரு தொடராக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது 'காற்றுக்கென்ன வேலி' சீரியல். இந்த சீரியல் முழுக்க முழுக்க கல்லூரியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் காதல், குடும்பம், எமோஷன் இடையில் கொஞ்சம் சமூக பிரச்சனை என எல்லாம் கலந்த கலவையாக இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. அத்தோடு இந்த சீரியலில் அடிக்கடி பரபரப்பு திருப்பங்களும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.  அதில் ஓடிவந்து ஷிவானி சூர்யாவைக் கட்டியணைத்து கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுக்கின்றார். அதைப் பார்த்த வெண்ணிலா விம்மி விம்மி அழுகின்றார்.


பின்னர் சூர்யாவும் தனியாக ஓர் ரூமில் அமர்ந்திருந்து அலுத்து கண்ணீர் வடிக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 


Advertisement

Advertisement