• Jul 25 2025

ஆதிரை கல்யாணத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி... குணசேகரன் தீட்டிய சதித் திட்டம்... ஜனனி கூறியதைக் கேட்டு ஷாக்கான சக்தி... அடுத்து நடக்கப் போவது என்ன..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மக்கள் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வண்ணம் இருக்கின்றது.


அந்தவகையில் தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் குணசேகரன் ஒருவரிடம் "ஆதிரை கல்யாணத்திற்காக நாங்க எல்லாம் கிளம்பி மண்டபத்திற்குப் போய்டுவோம். வீட்டுக்கு வாங்க வந்து கமுக்கமாக வேலையை முடியுங்க" எனக் கூறுகின்றார்.


மறுபுறம் ஜனனி சக்தியிடம் "அப்பத்தா ரூமில் சிசிடிவி பிக்ஸ் பண்ணிட்டேன், சொத்து விஷயமாக முக்கியமாக ஒரு லீடு கிடைச்சிருக்கு சக்தி" எனக் கூறுகின்றார். அதனைக் கேட்டதும் சக்தி அதிர்ச்சி அடைகின்றார். இவ்வாறாக இந்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 


இதன் பின்னர் என்ன நடக்கப் போகிறது என்பதனை எபிசோட்டின் மூலமாக முழுமையாகத் தெரிந்து கொள்வோம். 

Advertisement

Advertisement