• Jul 25 2025

மக்களை சந்திக்கத்தயாராகும் சிம்பு; குஷியில் ரசிகர்கள்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பல வெற்றிப்படங்களை கொடுத்த சிம்பு வெந்து தணிந்த காடு எனும் திரைப்படத்திற்கு பின் அடுத்ததாக "பத்து தல" திரைப்படம் நடித்து வருகின்றார்.இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் கிருஷ்ணா இயக்கி வருகிறார். அத்தோடு கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன், அனு சித்தாரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ஸ்டுடியோ கிரீன் K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் K L பணிபுரிகிறார். பத்து தல படத்தின் படப்பிடிப்பு ஐத்ராபாத், விசாகப்பட்டினம், பெல்லாரி, துங்கபத்திரை அணை, காரைக்குடி, கோவிலூர், கன்னியாகுமரி ஆகிய  பல ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.அத்தோடு பத்து தல திரைப்படம் மார்ச் 30 ஆம் தேதியன்று வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த  வகையில், பத்து தல படத்தின் டீசர், மார்ச் 03 ஆம் தேதியன்று அதாவது இன்று, மாலை 05 : 31 மணிக்கு வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முழுக்க தாடியுடன் ஒரு கேங்ஸ்டர் லுக்கில் சிம்பு பத்து தல படத்தில் இருப்பதால், இந்த படத்தின் டீசரையும் மிகுந்த ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி ஆடியோ லோஞ் இடம் பெறவுள்ளது.இதற்கு ரசிகர்கள் அனைவருக்கும் அனுமதி உண்டு என்று கூறப்படுகின்றது.அத்தோடு அங்கு லைவிவ் பாடல்களை ஏ.ஆர்.ரகுமான் செய்யப்போகின்றார் எனவும் கூறப்படுகின்றது. பெரும்பாலும் இதற்கு சிறப்பு விருந்தினராக சூர்யா வருவார் என்று கூறப்படுகின்றது.

அடுத்த முக்கியமான விடயம் என்னவென்றால் மார்ச் 10 ஆம் தேதி சிம்பு  இந்தியா வருவதால் ஆடியோ லோஞ்சிற்கு கட்டாயம் சிம்பு வருவார் என்றும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement