• Jul 24 2025

'பத்து தல' படம் பார்த்த சிம்புவின் குடும்பம்.. மகிழ்ச்சியில் டி.ராஜேந்தர்.. என்ன சொல்லி இருக்கார் தெரியுமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சிம்புவின் நடிப்பில் தற்போது 'பத்து தல' திரைப்படம் வெளியாக காத்திருக்கின்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


மேலும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதனையடுத்து கடந்த மார்ச் 18 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சிம்பு வழக்கத்துக்கு மாறாக காளை பட கெட்டப்பில் வந்திருந்து ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்


அந்தவகையில் பத்து தல படமானது நாளை (மார்ச் 30) வெளியாகிறது. இப்படத்தினுடைய முதல் காட்சி 8 மணிக்கு தொடங்கும் நிலையில் பல இடங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. இந்நிலையில் பத்து தல படத்தை அவரது குடும்பத்தினர் சிறப்பு காட்சியில் நேற்றிரவு கண்டு களித்துள்ளனர். 


இதனைத் தொடர்ந்து படம் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ள சிம்புவின் அப்பாவும், இயக்குநருமான டி.ராஜேந்தர் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தனது வாழ்த்தினைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement