• Jul 24 2025

Simran கிட்ட இது இல்லனு.. எதுமே சொல்ல முடியாது- தாறுமாறாக புகழ்ந்து தள்ளிய நடிகை ப்ரியா பவானி ஷங்கர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில்... அதுவும் செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் சீரியலில் நுழைந்து, வெள்ளித்திரையில் எடுத்ததுமே ஹீரோயின் வாய்ப்பை பெற்று, தனக்கான வளர்ச்சியை தக்க வைத்து கொண்டவர் தான் ப்ரியா பவானி ஷங்கர்.

இவரின் அசுர வளர்ச்சிக்கு காரணம், ஒரு புறம் திறமை என்றாலும் திரையுலகில் தொட்டதெல்லாம் துலங்க ஒரு அதிர்ஷ்டமும் வேண்டும். காரணம் வளர்ந்து வரும் நேரத்தில், ஒரு படம் தோல்வியாக அமைந்தாலும் அந்த நடிகையை தூக்கி ஓரம் கட்டிவிட்டு, அடுத்தடுத்து புது புது ஹீரோயின்களுக்கு வலைவீச துவங்கி விடுவார்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்.


அந்த விதத்தில் ப்ரியா பவானி ஷங்கர் மிகவும் அதிஷ்டக்கார புள்ளை தான். இவர் ஹீரோயினாக அறிமுகமான, மேயாத மான் திரைப்படம், விஜய்யின் மெர்சல் படத்துடன் மோதி வெற்றி பெற்றது.இதை தொடர்ந்து இவர் நடித்து வெளியான, கடைக்குட்டி சிங்கம் , மாஃபியா, யானை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதோடு, இவரை முன்னணி ஹீரோயின் லிஸ்டிலும் இடம்பெற வைத்துள்ளது.

அதற்கேற்றாப்போல் அம்மணியும் சமீப காலமாக, இளம் ஹீரோக்கள் படங்களை விட, ராகவா லாரன்ஸ், ஜெயம் ரவி, போன்ற முன்னணி நடிகர்கள் படங்களையே குறி வைத்து கமிட் ஆகி நடிக்கிறார்.இறுதியாக ராகவா லான்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் நடித்திருந்தார்.


இந்த நிலையில் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் நடிகை சிம்பன் பற்றி புகழ்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது சிம்ரன் மேடம் கிட்ட அது இல்லை இது இல்லை என்று எதுவுமே சொல்ல முடியாது ரொம்பவே நடிப்பாங்க. நல்ல டான்ஸ் ஆடுவாங்க. முதல் எல்லாம் அதிகமாக மேக்கப் வசதி எல்லாம் கிடையாது ஆனால் அப்பவும் அவங்க சூப்பராக இருந்தாங்க வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஆரம்பிச்சாங்க. அதனாலேயே  எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும் என தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






Advertisement

Advertisement