• Jul 26 2025

அஞ்சலியை ஓங்கி அறைந்த சீதா... கோபத்தில் அதிரடி முடிவெடுத்த மகாலட்சுமி... ராமிற்காக சீதா எடுக்கப் போகும் புதிய அவதாரம்.. 'சீதா ராமன்' ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல்களில் ஒன்று 'சீதா ராமன்'. இந்த சீரியலானது நகைச்சுவை, அழுகை, சிரிப்பு என்பவற்றுக்குப் பஞ்சமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் சீதா அஞ்சலியை கை நீட்டி ஓங்கி அடிக்கின்றார். அந்த சமயத்தில் அங்கு வந்த மகாலட்சுமி "அஞ்சலியை அடித்திருக்காய், பரத நாட்டியக் குருவை அடிக்கப் போய் இருக்காய், அவ கூட பரத நாட்டியம் ஆடி ஜெயிச்சு காட்டுடி" எனக் கூறி சீதாவிடம் சபதமிடுகின்றார்.


அதற்கு சீதா "நான் ரெடி' என சம்மதிக்கின்றார். பதிலுக்கு மகாலட்சுமி நீ தோத்திட்டால் இந்த வீட்டை விட்டும் ராமை விட்டும் போய்டணும் என்கிறார். அதற்கு சீதா "இவங்க தோத்திட்டால் மதுவை வீட்டை விட்டு அனுப்பிடணும்" என்கிறார். அதற்கு மகாலட்சுமி ஆச்சர்யத்துடன் பார்க்கின்றார். 


இவ்வாறாக பரதம் என்றால் என்னனு தெரியாத சீதா தான் பரதம் கத்துக்கிட்டு போட்டியில் ஜெயிச்சு காட்டுவேன் என ராமிடம் உறுதி அளிக்கின்றார்.   

Advertisement

Advertisement