• Jul 25 2025

சிறிது காலம் ஓய்வெடுக்கவுள்ளேன்... சிவகார்த்திகேயன் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

எவ்வித திரை பின்புலமும் இல்லாமல் சின்னத்திரையிலிருந்து வந்து வெள்ளித்திரையில் தடம் பதித்து இன்று உச்ச நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகும் படங்கள் அனைத்திற்குமே சிறியோர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அடிமை.


ஏனெனில் இவரது நகைச்சுவையான பேச்சினை ரசிப்பதற்கென்றே ஏராளமான ரசிகர்கள் இவரது படங்களை விரும்பிப் பார்ப்பார்கள். அந்தவகையில் இவரின் நடிப்பில் தற்போது 'மாவீரன்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சுனில், மிஸ்கின், கவுண்டமணி, யோகி பாபு போன்ற பலர் நடித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் 11-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 


இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது டுவிட்டரில் போட்டுள்ள பதிவொன்று ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றது. அதாவது அப்பதிவில் "என் அன்பு சகோதர சகோதரிகளே, டுவிட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். நான் விரைவில் திரும்பி வருவேன், பத்திரமாக இருங்கள். என் படம் குறித்த அப்டேட்களை என் குழுவினர் இங்கு பதிவிடுவார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.


திடீரென சிவகார்த்திகேயன் டுவிட்டரில் இருந்து விலகுவதற்கான காரணம் தெரியாமல் ரசிகர்கள் பலரும் குழம்பிப் போயுள்ளனர்.  

Advertisement

Advertisement