• Jul 25 2025

'படையப்பா' படத்தில் முதலில் நடிக்க இருந்தது சௌந்தர்யா இல்லையாம்... அப்போ யாராக இருக்கும்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக பல காலமாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சினிமாவில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் இன்றுவரை ஏராளமான படங்களில் நடித்து விட்டார். அந்தவகையில் இவரின் நடிப்பில் தற்போது 'ஜெயிலர்' திரைப்படம் உருவாகி வருகின்றது.


மேலும் இவர் நடிப்பில் எந்தப் படம் உருவானாலும் அந்தப் படத்தை எளிதில் ரசிகர்களால் மறக்க முடியாது. அவ்வாறான படங்களில் ஒன்று தான் 'படையப்பா'. அதாவது கே. எஸ். ரவிக்குமார்-சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படமே படையப்பா.


இப்படத்தில் தமிழ் சினிமாவின் இரு துருவங்களான ரஜினியும் சிவாஜியும் ஒன்றாக இணைந்து நடித்திருந்தார்கள். மேலும், ரஜினிக்கு நிகரான வில்லி கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.


அத்தோடு இப்படத்தில் கதாநாயகியாக சௌந்தர்யா நடித்திருந்தார். படையப்பா படத்தில் ரசிகர்களின் மனதை அதிகளவில் கவர்ந்த கதாபாத்திரங்களில் ஒன்று கதாநாயகி கதாபாத்திரம். இந்நிலையில் தற்போது இதுகுறித்த மற்றோர் செய்தி வெளியாகி இருக்கின்றது.


அதாவது சௌந்தர்யா நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை மீனா தானாம். ஆனால், தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களால் தான் இப்படத்தில் மீனாவால் நடிக்கமுடியாமல் போனதாம். இதன்பின் தான் இப்படத்தில் சௌந்தர்யா கதாநாயகியாக கமிட்டானார் என்று கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement