• Jul 25 2025

அரசியலுக்காக இப்படியொரு மாஸ்டர் பிளானா?- ஆந்திராவில் பிரமாண்ட பங்களா வாங்கிய குஷ்பூ

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பூ. இவர் . ரஜினி, கமல் தொடங்கி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து படங்கள் நடித்துவிட்டார்.சினிமாவில் நாயகியாக வாய்ப்பு குறைந்ததும் தொலைக்காட்சி பக்கம் வந்த குஷ்பூ தொடர்களில் நடித்து வந்தார், அப்படியே நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்தார்.

இப்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.சினிமாவை தாண்டி நடிகை குஷ்பூ அரசியலிலும் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். அவர் அரசியலில் ஒருபடி மேலே செல்ல புதிய வழி பயன்படுத்த இருக்கிறாராம். அதாவது தற்போது ஆந்திராவில் பெரிய பங்களா ஒன்றை வாங்கி இருக்கிறாராம்.


அங்கு 2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட முடிவு செய்து ஆந்திராவில் பங்களா வாங்கியிருப்பதாக பத்திரிக்கையாளர் ஒருவர் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். மேலும் அதில் அவர் குஷ்பூ தெலுங்கில் அதிகமான சீரியல்களில் நடிதது வருவதால் ஹொட்டலில் அடிக்கடி தங்க முடியாத காரணத்தினாலும் ஆந்திராவில் இருந்து தான் தனது அரசியலை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இருக்கின்றாராம். இதனால் அங்கு பங்களா வாங்கியுள்ளாராம்.


இதனால் தமிழ்ப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.மேலும் இவர் அண்மையில் வெளியாகியிருந்த விஜய்யின் வாரிசு படத்திலும் நடித்திருந்தார். இருப்பினும் இவர் நடித்த சீன்கள் நீக்கப்பட்டே படம் வெளியாகியிருந்தது. இதனால் குஷ்பூ சில விமர்சனங்களுக்கு உள்ளாகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement