• Jul 25 2025

கார்த்திக்கை போடா வெளிய என்று துரத்திய சுந்தரி- ஆத்தா எடுத்த முடிவு என்ன தெரியுமா?- விறுவிறுப்பான திருப்பங்களுடன் சுந்தரி சீரியல்

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கார்த்திக் இரண்டாவதாக அனு என்பவரைத் திருமணம் செய்திருக்கும் விடயம் கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் தெரிய வந்து விட்டது. இருப்பினும் அனுவுக்கு கார்த்திக் பற்றி தெரிந்தால் என்ன நடக்கும் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் முக்கியமாகும்.

மேலும் கார்த்திக் பற்றிய அனைத்து உண்மைகளும் சுந்தரியின் ஆத்தாவுக்கு தெரிய வந்து விட்டதால் அவர் கார்த்திக் மீது சரியான கோபத்தில் இருக்கின்றார். மேலும் வாய் பேச முடியாமலும் போனதால் சுந்தரியிடம் கார்த்திக் கட்டிய தாலியை கழட்டி எறிய சொல்கின்றார்.


ஆனால் சுந்தரியோ இது தான் என்னுடைய வாழ்க்கையின் வலியின் அடையாளம் இதை எப்படி எறிவது என்றுகேட்க சுந்தரியின் ஆத்தா கார்த்திக்கை வீட்டை விட்டு வெளியே போக சொல்லி கலைக்கின்றார். தொடர்ந்து சுந்தரியும் போடா வெளியே  என்று சொல்கின்றார். இந்த ப்ரோமோ வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement